முதல்வரின் தனிச்செயலராக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

by Editor / 07-05-2021 04:03:12pm
முதல்வரின் தனிச்செயலராக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

முதல்வர் ஸ்டாலின் முதன்மைச் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.உதயசந்திரன்அதிமுக ஆட்சியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக சிறப்பாக பணியாற்றியவர். டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயச்சந்திரன் சிறப்பாக பணியாற்றி வந்தார். ஹால் டிக்கெட்களை நாமாகவே பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்வது என்ற புதிய உத்திகளை கையாண்டார். கீழடி அகழாய்வு விஷயத்தில் மிகுந்த பங்களிப்பு வழங்கி அகழாய்வை விரிவுபடுத்தினார்.உமாநாத்உமாநாத் ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர். மாவட்ட நிர்வாகத்தில் நிறைய சீரமைப்பு செய்து பெயர்பெற்றார். தமிழக மருத்துவ கொள்முதல் பிரிவில் உமாநாத் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முக்கிய பங்கு வகித்து வருகிறார்.சண்முகம்சண்முகம் 2002 ஐஆர்எஸ் பேட்ஜ் அதிகாரி. அருங்காட்சியக ஆணையராக பதவி வகித்து வருகிறார். திறமையான அவரை தேர்ந்தெடுத்து ஸ்டாலின் அருகில் கொண்டு வந்து அமர்த்தியுள்ளார்.அனு ஜார்ஜ்ஐஏஎஸ் அதிகாரி அனு ஜார்ஜ், தொழில்துறை கமிஷனராக பதவி வகித்தார். தொழில் மற்றும் வணிக இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.
 

 

Tags :

Share via