அதிர்ச்சி! கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
மதுரை மாவட்டம் அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் சண்முகப்பிரியா கொரோனா தொற்றால் காலமானார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டது. சில நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 90% நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவர் சண்முகப்ரியா உயிரிழந்துள்ளார். கடந்த ஓராண்டாக கொரோனோ தடுப்பு பணியில் ஈடுபட்டுவந்த அவர் உயிரிழந்தது சக மருத்துவ ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . கர்ப்பிணி என்பதால் அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது . இவர் மதுரை மருத்துவக்கல்லூரியின் முன்னாள் மாணவி. 2006ஆம் ஆண்டு படிப்பை முடித்தவர். கர்ப்பிணியாக இருந்தாலும் வீட்டில் இருக்காமல் மக்களுக்காக பணியாற்ற வந்து பணியின் போது கொரோனா தொற்று ஏற்பட்டு மரணமடைந்த சண்முகப்ரியாவுக்கு ராணுவ வீரருக்குத் தரும் இறுதி மரியாதையை வழங்கி, அவரது குடும்பத்தினருக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என சகமருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :