காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு: கடும் துப்பாக்கிச் சூடு

by Editor / 11-05-2021 09:01:30am
காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு: கடும் துப்பாக்கிச் சூடு

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் அருகே கோகர்நாக் பகுதியில், வைலூ என்ற இடத்தில் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர் கடும் தாக்கதல் நடத்தி வருகிறார்கள்.

லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், கடும் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருவதாக காஷ்மீர் காவல்துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வைலூ என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அங்குச் சென்ற பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாகவும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via