கொரோனா பாதித்தவருக்கு நடந்த  இறுதி சடங்கில்  21 பேர் பரிதாப பலி

by Editor / 11-05-2021 04:50:02pm
கொரோனா பாதித்தவருக்கு நடந்த  இறுதி சடங்கில்  21 பேர் பரிதாப பலி



கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை தொட்டு பார்த்த உறவினர்கள் 21 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 21ஆம் தேதி உயிரிழந்தார். இவரது உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் இறுதி சடங்கின் போது அவரது உடலில் போர்த்தி இருந்த பிளாஸ்டிக் கவரை பிரித்து அவரது உடலைத் தொட்டுப் பார்த்து உள்ளனர்.
அது மட்டுமில்லாமல் அந்த இறுதிச் சடங்கில் 150 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதில் 21 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது 21 பேரில் 5 முதல் 6 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் வயது முதிர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. மீதி இருப்பவர்கள் உயிரிழந்த தன் காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

 

Tags :

Share via