12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்ய வாய்ப்பில்லை அமைச்சர் அன்பில் மகேஷ்
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து 2 நாளாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில், தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 3வது நாளாக அவர் ஆலோசனை நடத்தினார்.
இதில், அதிகாரிகளுடன் அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பெற்றோர் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள், தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது என தெரிவித்தார். பொதுத் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
Tags :