யோகி ஆதித்யநாத் அரசுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

by Editor / 12-05-2021 04:36:50pm
 யோகி ஆதித்யநாத் அரசுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு



வீடு வீடாக சென்று கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் யோகி ஆதித்யநாத் அரசுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தாக்கம் கோரத்தாண்டவமாடி வருகிறது. மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் உள்ள மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
உத்திரபிரதேசத்திலும், கொரோனா பாதித்தவர்களை அடையாளம் காண, சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே உ.பி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் முறையே கவனிக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு உரிய படுக்கை வசதிகள் கூட இல்லை எனவும் புகார் கூறப்பட்டது.இந்தநிலையில் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். 
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெருக்கடியான காலகட்டத்தில் சில தவறுகள் நடப்பது இயல்பு என கூறினார்.ஆனால் அதை கண்டுகொள்ளாது சூழலுக்கு ஏற்றவாறு குறைகளை கண்டறிந்து, மாநில அரசுக்கு தெரிவிப்பது மிகவும் நல்லது என பதிலளித்தார். இந்தியாவிற்கு மற்ற பிற நாடுகள் தாராளமாக உதவி வருவதாக குறிப்பிட்ட அவர், உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதற்கு பிரதமர் மோடி எடுத்த முயற்சி தான் இதற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களை வீடு வீடாக சென்று கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது எனவும், இவர்களது இந்த செயலை உலக சுகாதார நிறுவனமே பாராட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via