தமிழகத்தில் புதிதாக 30,355 பேருக்கு கொரோனா:: 293 பேர் பலி

by Editor / 12-05-2021 08:58:48pm
தமிழகத்தில் புதிதாக 30,355 பேருக்கு  கொரோனா:: 293 பேர் பலி

 

 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 293 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் புதிதாக 30,355 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 14,68,864-ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 293 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,471-ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 19,508 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 12,79,658-ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1,49,853 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,72,735 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதிகபட்சமாக சென்னையில் 7,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Tags :

Share via