உ.பி.யில் ஒரேநாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று

by Editor / 14-04-2021 05:38:21pm
உ.பி.யில்  ஒரேநாளில்  20 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோருக்கு தொற்று

உத்தரப் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 20,510 பேருக்கு கொரோனா  வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,517 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தில் இன்னும் 1,11,835 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக, உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா  தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் அவருக்கும் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரத்தில் ஒரேநாளில் 4,157 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் 4,157 பேருக்கு கொரோனா 
இந்த நிலையில் ஆந்திரத்தில் ஒரநாளில் 4,157 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,37,049ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வுக்கு நேற்று  மேலும் 18 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 7,339ஆக உயர்ந்துள்ளது. கொரோனா விலிருந்து 1,606 பேர் குணமடைந்தனர்.இதுவைரை 9,01,327 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 28,383பேர்  சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via