தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்

by Editor / 30-06-2021 07:26:12pm
தடுப்பூசி தட்டுப்பாடு  இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்

 சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் தங்கு தடையின்றி தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வீணாகும் தடுப்பூசியின் அளவை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடே கிடையாது. ஆக்சிஜன் வசதியுடன் தமிழகத்தில் 32,405 படுக்கைகள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் தடையின்றி கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசிகள் வீணாவதை பெரிதபடுத்த வேண்டியதில்லை. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் போது மருந்து வீணாவது குறையும். பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். தமிழகத்தில் இதுவரை 41.21 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 8 லட்சத்திற்கு மேற்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும் முதற்கட்டமாக போடப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

 

Tags :

Share via