ராஜஸ்தானில்  22முதல் மே 21 வரை 144 தடை உத்தரவு

by Editor / 20-04-2021 07:31:46pm
ராஜஸ்தானில்  22முதல் மே 21 வரை 144 தடை உத்தரவு


 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது.

இவற்றில் ராஜஸ்தானில் 4.27 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  3.47 லட்சம் பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  3,204 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வை முன்னிட்டு ராஜஸ்தானில் ஏப்ரல் 22ந்தேதி முதல் வருகிற மே 21ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என மாநில உள்துறை அறிவித்து உள்ளது.
 

 

Tags :

Share via