பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் : மகேஷ் குமார் அகர்வால்!

by Editor / 23-04-2021 08:48:49am
பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் : மகேஷ் குமார் அகர்வால்!

பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தி உள்ளார். சென்னை அமைந்தகரையில் காவல்துறை சார்பில் நடந்த கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மகேஷ் குமார் அகர்வால், முகக்கவசம் அணிதலையும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், அவசியமின்றி வெளியில் செல்வதை மக்கள் தவிர்த்து சுயகட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கொரோனா நோய் தொற்றை ஒழிக்க காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மகேஷ் குமார் அகர்வால் வேண்டுகோள் விடுத்தார்.

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் : மகேஷ் குமார் அகர்வால்!

பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தி உள்ளார். சென்னை அமைந்தகரையில் காவல்துறை சார்பில் நடந்த கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மகேஷ் குமார் அகர்வால், முகக்கவசம் அணிதலையும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், அவசியமின்றி வெளியில் செல்வதை மக்கள் தவிர்த்து சுயகட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கொரோனா நோய் தொற்றை ஒழிக்க காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மகேஷ் குமார் அகர்வால் வேண்டுகோள் விடுத்தார்.

 

Tags :

Share via