தமிழகத்தில் மே 1, 2-ல் முழு ஊரடங்கு: சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை

by Editor / 26-04-2021 04:59:39pm
தமிழகத்தில் மே 1, 2-ல் முழு ஊரடங்கு: சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை



தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மே 1, 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தலாம். வாக்கு எண்ணிக்கை தொடர்புடைய வாகனங்களை மட்டும் இரண்டு நாட்கள் அனுமதிக்கலாம். முழு ஊரடங்கு தொடர்பாக ஏப்ரல் 28-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியுள்ளது.

 

Tags :

Share via