டெல்லியில் கர்ப்பிணியை சுட்டுக் கொன்ற கணவர்: அதிர்ச்சி வீடியோ 

by Editor / 30-06-2021 06:33:43pm
டெல்லியில் கர்ப்பிணியை சுட்டுக் கொன்ற கணவர்: அதிர்ச்சி வீடியோ 


டெல்லியில் நிசாமுதீன் பகுதியைச் சேர்ந்த சாய்னா என்ற பெண், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறைக்குச் சென்றுவிட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கர்ப்பிணியாக இருந்த அவர், தனது வீட்டு வாசலில் அமர்ந்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அவரது கணவர் வாசீம், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு , தனது மனைவியை சுட்டுக் கொலை செய்தார். அதனை தடுக்க வந்த நபரையும் அவர் சுட்டுக் கொலை செய்தார்.
இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விசாரணையில், சாய்னா ஜெயிலில் இருந்தபோது, அவரது சகோதரியுடன் வாசிமுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சாய்னா ஜெயிலில் இருந்து வந்ததால், அவருடைய சகோதரியுடன் பழக முடியாத ஆத்திரத்தில் மனைவியை சுட்டுக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

Dailyhunt

 

Tags :

Share via