தமிழகத்தில் ஒரே நாளில் 17,897 பேருக்கு கொரோனா! 107பேர் உயிரிழப்பு
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 17,897 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 48ஆயிரத்து 064ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,10,308ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 10,239பேர் ஆண்கள், 6,426பேர் பெண்கள். தமிழகத்தில் 264 பரிசோதனை மையங்கள் உள்ளன.
107பேர் உயிரிழந்துள்ளார். 56 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 51பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,933ஆக அதிகரித்துள்ளது. 15,542பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,21,575ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
Tags :