2ரயில்களில் கூடுதலாக 2 பொதுவகுப்பு பெட்டிகள் இணைப்பு.

by Editor / 28-12-2021 10:23:24pm
2ரயில்களில் கூடுதலாக 2 பொதுவகுப்பு பெட்டிகள் இணைப்பு.

பயணிகளின் வசதிக்காக திருச்செந்தூர் - பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலி - திருச்செந்தூர் - திருநெல்வேலி விரைவு சிறப்பு ரயில் ஆகியவற்றில் தலா இரண்டு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் கூடுதலாக இணைக்க மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் உத்தரவிட்டுள்ளார். இதன்படி இந்த கூடுதல் பெட்டிகள் திருச்செந்தூர் பாலக்காடு ரயில் மற்றும் திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் ஆகியவற்றில் டிசம்பர் 30 முதலும் பாலக்காடு - திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் ஆகியவற்றில் ரயில் டிசம்பர் 31 முதலும் இணைக்கப்படும். இந்த ரயில்கள் இனி மொத்தம் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளுடன் இயக்கப்படும். இந்த தற்காலிக ஏற்பாடு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும்.

 

Tags :

Share via