கள்ளச்சந்தையில் விற்பனை திமிங்கலத்தின் கழிவினை கடத்தி வந்த இருவர் கைது

by Editor / 03-01-2022 09:00:01pm
கள்ளச்சந்தையில் விற்பனை  திமிங்கலத்தின் கழிவினை கடத்தி வந்த இருவர் கைது

 தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தென்காசி  காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது   அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில்,  அந்தக வாகனத்தில் சென்னையிலிருந்து  பல கோடி ரூபாய் மதிப்பிலான Ambergris எனப்படும் சுமார் 21 கிலோ எடை கொண்ட  திமிங்கலத்தின் கழிவினை  கட்டிகளாக விற்பனைக்காக  கொண்டுவந்த கன்னியாகுமரி  குலசேகரத்தினை  சேர்ந்த  ஜார்ஜ் மைக்கேல்ரோஸ் மற்றும் திருநெல்வேலி தாழையூத்தை  சேர்ந்த மோகன் ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் கடையநல்லூர் வனச்சரக அலுவலர் வசம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் மேற்படி இரு நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார் முதலியவை ஒப்படைக்கப்பட்டது.  கைப்பற்றப்பட்ட Ambergris எனப்படும் திமிங்கலத்தின் கழிவு பொருட்களின் மதிப்பு சுமார் 3.5 கோடி ஆகும்.

 

Tags :

Share via