குடியரசுதின நிகழ்ச்சி நேரில் வருவதை தவிர்க்குமாறு -தமிழக அரசு வேண்டுகோள்

by Admin / 25-01-2022 11:32:47pm
குடியரசுதின நிகழ்ச்சி நேரில் வருவதை தவிர்க்குமாறு -தமிழக அரசு வேண்டுகோள்

இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் மாண்புமிகு ஆளுனர் அவர்கள் ஜனவரி திஙகள் 26ஆம் நாள் காலை 8,00 மணிக்கு தேசிய கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள்.ஒவ்வொரு ஆண்டும் குடியரசுதின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும் பள்ளிக்குழந்தைகளும் பங்கேற்பர்.

கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு,பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்ந்தும் கலை நிகழச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கரூத்தில் கொண்டும்,கொரோனாதொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி ,உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

குடியரசுதின நிகழ்ச்சிகளை தொலைகாட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி/ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்தாண்டு,பொது மக்கள்,மாணவர்களி பள்ளிக்குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவைக்காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொஸ்ளப்படுகிறார்கள்.குடியரசு தின நிகழச்சிகளை தொலைக்காட்சி/வானொலியில் கண்டு/கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

Tags :

Share via