பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த பிரபல ரவுடிகள் 3 பேர் உட்பட 4 பேர் கைது

by Editor / 12-02-2022 12:11:35pm
பயங்கர ஆயுதங்களுடன்  சுற்றிதிரிந்த  பிரபல ரவுடிகள் 3 பேர் உட்பட 4 பேர் கைது

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி மெயின்ரோடு பகுதியில்(10.02.2022) பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரிவாள் மற்றும் வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து 
தனிப்படை போலீசார் ரோந்து மேற்கொண்டதில், கோவில்பட்டி சங்கரலிங்கபுரம், செவக்காடு பகுதியில் சுற்றி திரிந்த 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் 1) மந்திரமூர்த்தி (29), த/பெ. காந்தாரிமுத்து, வள்ளூவர் நகர், கோவில்பட்டி, சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்களான 2) கருப்பசாமி (20), த/பெ. முருகன், 3) பரமசிவம் (எ) மந்திரமூர்த்தி (23), த/பெ. கண்ணன் மற்றும் 4) மதன்குமார் (19), த/பெ. கோட்டுசாமி ஆகிய 4 பேர் என்பதும் தெரியவந்தது.4 பேரையும்  கைது செய்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மந்திரமூர்த்தி மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் கஞ்சா விற்பனை வழக்கு உட்பட15 வழக்குகளும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், திருட்டு வழக்கு உட்பட 4 வழக்குகளும் என மொத்தம் 19 வழக்குகளும், எதிரி கருப்பசாமி மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 3 வழக்குகளும், எதிரி பரமசிவம் (எ) மந்திரமூர்த்தி மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 3 வழக்குகளும், எதிரி மதன்குமார் மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி  என 2 வழக்குகளும் உள்ளது. இதுபோன்று  ரவுடித்தனம் செய்பவர்கள், கஞ்சா போன்ற போதை பொருள்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

 

Tags : Four people were arrested, including three famous rowdies who roamed around with weapons

Share via