3 போலீஸ் அதிகாரிகள் பலி

by Admin / 19-02-2022 01:04:32pm
 3 போலீஸ் அதிகாரிகள் பலி

ஒடிசா மாநிலம் சோரிஸ்பதார் என்ற இடத்தில் போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த போலீஸ் வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த போலீஸ் அதிகாரிகள் ரவிபிஜோர், சேனாராவ், ஜகபந்த்கவுடா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
 
டிரைவர் உள்பட 14 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via