டிரோன் மூலம் வீசப்பட்ட வெடிகுண்டுகள் ஆயுதங்கள் பறிமுதல்

by Admin / 25-02-2022 02:59:25pm
 டிரோன் மூலம் வீசப்பட்ட வெடிகுண்டுகள் ஆயுதங்கள் பறிமுதல்

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா, டி.ஆர்.எப். ஆகியவற்றின் டிரோன் ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆர்.எஸ்.புராவில் உள்ள ஆர்னியா பகுதியில் போலீசார் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் டிரோன் மூலம் வீசப்பட்ட வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த ஆயுதங்களில் ஒரு துப்பாக்கி, 70 தோட்டாக்கள், 3 டெட்டனேட்டுகள், ரிமோட் வெடிகுண்டுகள், வெடிமருந்துகள், 6 கையெறி குண்டுகள் ஆகியவை இருந்தன.

இந்த வெடிபொருட்கள் டிரோன் மூலம் இந்தியாவின் சர்வதேச எல்லைக்குள் வீசப்பட்டுள்ளன. இதன் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த இருந்தது முறியடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆர்.எஸ்.புரா பகுதிக்குள் நுழைய முயன்ற டிரோன் மீது எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், சுமார் 20 முறை நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு காரணமாக அந்த டிரோன் பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பி சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


 

 

Tags :

Share via