எல்லைதாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேர் கைது-

by Editor / 27-02-2022 03:26:30pm
எல்லைதாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேர் கைது-

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 தமிழக மீனவர்களை நாட்டுப் படகுடன் சிறைப்பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் படகினையும் இலங்கை கடற்படையினர் மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். பின் 6 மீனவர்களையும் கொரானா, மலேரியா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி இலங்கை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த நீதிபதி வரும் மார்ச் 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 


 

 

Tags : 6 Tamil Nadu fishermen arrested for fishing across the border

Share via