நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கையை 8.22 கோடி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

by Admin / 16-03-2022 04:34:00pm
நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கையை 8.22 கோடி நிதி  அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8 கோடியே 22 லட்சம் ஆக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இது தொடர்பாக பேசிய அவர் 2021 மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி நாட்டிலுள்ளமொத்த மக்கள் தொகை 121 கோடியே 60 லட்சம் பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தவும் வருமான வரி படிவம் தாக்கல் செய்யவும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தொடர்ச்சியான நினைவூட்டல்கள் முன்னேற்ற பட்டு வருகின்றன என்றும் அவர்  கூறினார்

 

Tags :

Share via