பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

by Editor / 25-03-2022 05:51:03pm
பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

 திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி விரைவு ரயில்கள் செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் இயக்க காரணங்களுக்காக நின்று சென்றது. தற்போது பயணிகள் வசதிக்காக மார்ச் 25 முதல் பாலருவி ரயில் இரு மார்க்கத்திலும்  செங்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி விரைவு ரயில் (16791) செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12.40 மணிக்கு வந்து சேர்ந்து நள்ளிரவு 12.45 மணிக்கு புறப்படும். பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி விரைவு ரயில் (16792) செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு அதிகாலை 02.55 மணிக்கு வந்து சேர்ந்து அதிகாலை 03.00 மணிக்கு புறப்படும்.

 

Tags : The Balaruvi Express stops at the Red Fort railway station

Share via