பிலிப்பைன்ஸில் டால் எரிமலையில் விண்ணை முட்டும் அளவுக்கு புகை வெளியேறுவதால் அவசரநிலை அறிவிப்பு

by Staff / 27-03-2022 01:48:54pm
பிலிப்பைன்ஸில் டால்  எரிமலையில் விண்ணை முட்டும் அளவுக்கு புகை வெளியேறுவதால் அவசரநிலை அறிவிப்பு

பிலிப்பைன்ஸ் தலைநகர் மானில அடுத்துள்ள டால் எரிமலையிலிருந்து விண்ணை முட்டும் அளவுக்கு புகை வெளியேறுவதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டால் கூடியிருக்கும் ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

சிறிய எரிமலையாக  டால்  கருதப்பட்டாலும் வெடித்து சிதறும் வாய்ப்புள்ளதாக நில அதிர்வு மற்றும் விரிவான ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எரிமலையில் இருந்து ஏறத்தாழ ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு மேல் விண்ணில் கருப்பு புகை சூழ்ந்து காட்சியளிக்கிறது.

எரிமலை சுற்றியுள்ள பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

 

Tags :

Share via