மோசமான வானிலை காரணமாக 3300 அதிகமான விமானங்கள் ரத்து

by Staff / 04-04-2022 11:19:08am
 மோசமான வானிலை காரணமாக 3300 அதிகமான விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மோசமான வானிலை போன்ற காரணத்தால் வார இறுதியில் 3 ஆயிரத்து 300க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்த விமானங்களை கண்காணிக்கும் இணையதளம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் புளோரிடா போர்ட்  லாட ர்டெல் மற்றும்ஆர்லாண்டோ ஆகிய  இடங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன புளோரிடாவில் கடந்த சனிக்கிழமை புயல் வீசியதால் விமானசேவை கடும் பாதிப்புக்கு உள்ளானதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த சனிக்கிழமை மற்றும் தொழிநுட்பச் சிக்கல் காரணமாக ஆயிரம் விமானங்கள் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

 

Tags :

Share via