பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, டெல்லியில் ஆட்டோ டாக்சிகள் வேலை நிறுத்தம்.

by Staff / 18-04-2022 01:03:56pm
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து,  டெல்லியில் ஆட்டோ டாக்சிகள் வேலை நிறுத்தம்.

சிஎன்ஜி க்கு மானியம் வழங்க கோரி டெல்லி முதலமைச்சருக்கு கடந்த வாரத்தில் கடிதம் எழுதியதாக ஆட்டோ ஓட்டுநர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடிதத்திற்கு அரசு பதில் அளிக்காததால் இரண்டு நாள் போராட்டம் நடத்தியதாகவும், இப்பொழுது இரண்டு நாள் வேலை நிறுத்தம் அறிவிப்புதாகவும், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் கூறியுள்ளது.  இதனால் தலைநகரில் இன்று பெரும்பாலான ஆட்டோக்கள் டாக்சிகள் ஓடாது.

ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை ,லக்னோ போன்ற நகரங்களிலும், டெல்லிக்கு ஆதரவாக ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

 

Tags :

Share via