கொடநாடு வழக்கு விசாரணை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

by Staff / 23-04-2022 03:39:48pm
கொடநாடு வழக்கு விசாரணை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 220 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ள நிலையில் விசாரணை ஜூன் மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற நிலையில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் நிபந்தனை ஜாமீனில் உள்ள வளையார் மனோஜ் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர் இந்த நிலையில் இவ்வழக்கில் தனிப்படை போலீசார் மேலும் பலரிடம் விசாரணை நடத்த உள்ளதால் அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. அடுத்த விசாரணையை ஜூன் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

Tags :

Share via