கத்திகுத்தில் காயம் அடைந்த பெண் உதவி ஆய்வாளருக்கு 5 லடசம் நிவாரணம் அறிவிப்பு

by Staff / 23-04-2022 04:27:51pm
கத்திகுத்தில் காயம் அடைந்த பெண் உதவி ஆய்வாளருக்கு  5 லடசம்  நிவாரணம் அறிவிப்பு


 நெல்லை மாவட்டத்தில் கத்திகுத்தில் காயம் அடைந்த பெண் உதவி ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க உள்ளதாகவும் உத்தரவிட்டுள்ளார். கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரேசாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் திடீரென அவரை கத்தியால் தாக்கினர். இதில் காயமடைந்த மார்க்ரெட் தெரேசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரைத் தாக்கி விட்டு தப்ப முயன்ற ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மார்க்கெட்  தெரேசாஉயர்தர சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்குமாறும் நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via