ஆடிட்டர் கொலை வழக்கில் கார் டிரைவர் உள்பட 2 பேர் கைது

by Editor / 08-05-2022 08:23:52pm
ஆடிட்டர் கொலை வழக்கில் கார் டிரைவர் உள்பட 2 பேர் கைது

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை படுகொலை செய்து மூட்டை மூட்டையாக நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு ஆந்திரா நோக்கி சென்றுகொண்டிருந்த கார் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் டங்குடூர் சுங்கச்சாவடியில் பிடிபட்ட ஓட்டுநர் லால் கிருஷ்ணா, ரவி ஆகியோரிடம் இருந்து 50 கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via