பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி சில மாவட்டங்களில் வேலைநிறுத்தப் போராட்டம்

by Staff / 17-05-2022 02:03:40pm
பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி சில மாவட்டங்களில் வேலைநிறுத்தப் போராட்டம்

பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி ஈரோடு திருப்பூர் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் இரண்டாவது நாளாக கவனயீர்ப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் ஜவுளிக்கடை நிறுவனங்களின் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றும் அப்துல் கனி மார்க்கெட் பல்வேறு ஜவுளித் தினசரி மற்றும் வார சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. இதேபோல் திருப்பூர் கரூர் மாவட்டங்களில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வெளிநாட்டு ஏற்றுமதி நிறுவனங்களும் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via