உக்ரைனுக்கு கூடுதலாக 1.5 பில்லியன் டாலர் நிதியுதவி உலக வங்கி அறிவிப்பு
உக்ரேனுக்கு கூடுதலாக 1.5 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்க உள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது .பெரும் பாதிப்பை சந்தித்து உள்ள உக்ரேனுக்கு அடுத்த சில மாதங்கள் பொருளாதார ரீதியாக தாக்குப்பிடிக்க 1.5 பில்லியன் டாலர் நிதி உதவி தொகை வழங்குவதாக உலக வங்கி அறிவித்தது.இத்தொகை மூலம் அரசு மற்றும் சமூக ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்டவற்றை அரசு வழங்க முடியும் என தெரிவித்துள்ளது .ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரேன் நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.
Tags :