இலங்கையில் இருந்து அகதிகளாக எட்டு பேர் தமிழகம் வருகை

by Editor / 05-07-2022 12:04:30pm
 இலங்கையில் இருந்து அகதிகளாக எட்டு பேர் தமிழகம் வருகை

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ வழியில்லாமல் அண்மைக்காலமாக இலங்கை வாழ் தமிழ் மக்கள் கடல் மார்க்கமாக தமிழகம் வர துவங்கியுள்ளனர். இன்று தனுஷ்கோடி அரசியல் முனை கடற்கரை பகுதிக்கு இலங்கையில் இருந்து அகதிகளாக எட்டு பேர் வந்திருப்பதாக போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மெரைன் காவல் துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் பொழுது அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த  லாவேந்திரன், சசிகலா கதிர், செல்வராஜ், விஜயகாந்த், கமலராணி, அயங்கரன், ஸ்ரீராம், மற்றும் நளினி உள்ளிட்ட எட்டு பேரும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியில்லாமல் மர்ம படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை வந்து இறங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.தற்போது அரிச்சல் முனை கடற் பகுதியில் இருந்து அவர்களை மீட்ட காவல்துறை அதிகாரிகள் மண்டபம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


 

 

Tags :

Share via