கன மழை காரணமாக நிலச்சரிவு

by Editor / 05-07-2022 05:42:35pm
கன மழை காரணமாக நிலச்சரிவு

கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படவும் போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஜெயந்த் சர்கார் தெரிவித்துள்ளார்.
கடந்த 12 மணி நேரத்தில் மும்பையில் 95.81 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால், சாலைகளில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.
கன மழை எச்சரிக்கையை அடுத்து, தலைமைச் செயலாளர் மனுகுமார் ஸ்ரீவத்சவாவுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, நிலைமையை உண்ணிப்பாக கவனித்து பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு துரித நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via