திருநங்கைகள் தாக்கியதால் உயிரிழந்த வாலிபர்-திருநங்கைகள் கைது.

by Editor / 14-07-2022 10:14:06am
திருநங்கைகள் தாக்கியதால் உயிரிழந்த வாலிபர்-திருநங்கைகள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மாலை 6 மணி முதல் இரவு 2 மணி வரை திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக குற்றசாட்டு இருந்து வருகிறது.இதனை மெய்பிக்கும் வகையில் கடந்த 8ஆம் தேதி இரவு துடியலூரில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வர்களாக வேலை செய்து வரும் தர்மலிங்கம், பிரவீன் ஆகிய 2நபர்களும்  ரேஸ்மிகா என்ற திருநங்கையிடம் பாலியல் இச்சைகாக சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக ரேஸ்மிகா கத்தி கூச்சலிடவே அருகில் இருந்த மற்ற திருநங்கைகள் மம்தா, கவுதமி, ஹர்னிகா, ரூபி, கீர்த்தி ஆகியோர் அங்கு ஓடி வந்து தர்மலிங்கம், பிரவீன் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் பிரவீன் அங்கிருந்து தப்பி ஓடிவிடவே  தர்மலிங்கம் மட்டும் சிக்கிக்கொண்டார் அவரை திருநங்கைகள்  கடுமையாக தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  தர்மலிங்கம் பைக்கில் செல்லும் போது விழுந்து விட்டதாக கூறிஅனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் தர்மலிங்கத்திடம் நடத்திய தீவிர விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் தர்மலிங்கம் சிகிச்சை பலனின்றி பலியானார்.இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து திருநங்கைகளை கைது செய்தனர்.

 

Tags : Teenager-transgender who died after being attacked by transgenders arrested.

Share via