பிரதமர் மோடியை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் 6 பேரிடம் தீவிர விசாரணை
கடந்த 12ம் தேதி பாட்னா சென்ற பிரதமர் மோடியை குறிவைத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தீவிரவாத செயல்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி திரட்டியதாக பீகார் போலீசார் 6 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வந்த பிரதமர் மோடியை குறி வைத்தது அம்பலமாகியுள்ளது .இளைஞர்களை மூளை சலவை செய்து கத்திகளையும் வாள்களையும் பயன்படுத்தி மத கலவரத்தை தூண்ட பயிற்சி அளித்து வந்ததாகவும் அந்த ஆறு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Tags :