ஏடிஎம் மிஷினில் சுத்தியல் கொண்டு அடித்து உடைத்த இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மெஷினை சுத்தியலை கொண்டு அடித்து உடைத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். மிஷினில் மானிடர் உடைக்கப்பட்டு இருந்ததாக வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் அதிரடி ஆய்வு செய்தபோது ஒரு இளைஞர் அதனை அடித்து நொறுக்கியது தெரியவந்தது. ஏடிஎம்மில் பணம் வராத ஆத்திரத்தில் அந்த இளைஞர் உடைத்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
Tags :