40க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை காட்டிய நபர் கைது

by Editor / 16-07-2022 12:51:18pm
40க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை காட்டிய நபர் கைது

தமிழகம் கேரளா பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வரை போலீசார் மடக்கி பிடித்தனர் கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் விடுமுறை நாட்களில் காலியாக உள்ள வீடுகளை பார்த்து கைவரிசை காட்டி வந்த நபரை போலீசார் தேடி வந்தனர். கொள்ளை நடந்த இடங்களில் பொதுவாக ஒரு வெள்ளை நிற ஆக்டிவா வாகனம் கடந்து செல்வதை நோட்டமிட்ட போலீசார் ஊருக்குள் அதே வாகனத்தில் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். பிடிபட்டவர் ஸ்டீபன் என்றும் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. 55 சவரன் நகையை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via