நவி மும்பையில் கண்டெய்னரில் ஆறு மாதமாக கேட்பாரற்று கிடந்த போதைப்பொருள் பறிமுதல்
மும்பையின் புறநகர் நவிமும்பை பகுதியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் கடத்த முயற்சித்த ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நவகர் லாஜிக் என்ற நிறுவனத்தின் பெயரில் பனவெல் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக கண்டைனர் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு அதனை காவல்துறையினர் கைப்பற்றி சோதனையிட்டபோது அதில் ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 363 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
Tags :