கொள்ளிடம் ஆற்றில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் இருட்டிலும் போராடி பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

by Editor / 19-07-2022 11:53:55am
கொள்ளிடம் ஆற்றில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் இருட்டிலும் போராடி பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே காவிரியில் திருப்பி விடப்படுகிறது இதனால் சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் தற்போது கொள்ளிடம் ஆற்றில் செல்கிறது நேற்றுமாலை அந்த ஆற்றில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் தண்ணீர் அதிகமாக வருவதை அறிந்து தங்களது ஆடுகளை கொண்டு சென்றனர் அதற்குள் கிடுகிடுவென தண்ணீர் வர அதிகரித்ததால் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர் மேலும் இருட்டில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 4 பேரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

 

Tags :

Share via