மதுரையில் 3வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை
மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை வந்து திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையில் ரூ.75 கோடி பணம், 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அங்கு 3-வது நாளாகவும் இன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டி உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : 3rd day of raids by Income Tax Department in Madurai