முன்னே சென்ற தண்ணீர் லாரி மீது சுற்றுலா வேன் மோதி விபத்து

by Editor / 04-08-2022 02:26:43pm
முன்னே சென்ற தண்ணீர் லாரி மீது சுற்றுலா வேன் மோதி விபத்து

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே முன்னே சென்ற தண்ணீர் லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். கடலூரிலிருந்து 18 பேருடன் குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்த தேசிய நெடுஞ்சாலையில் நடுவே வைக்கப்பட்டுள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி சென்ற தண்ணீர் லாரி மீது மோதியது விபத்தில் வேனின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்த நிலையில் படுகாயமடைந்த 5 பேர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Tags :

Share via