இந்தோ திபெத் எல்லைக் காவல்படை(ITBP) வீரர்கள் 6 பேர் பலி. பலர் கவலைக்கிடம்
காஷ்மீரில் பேருந்து விபத்துக்குள்ளானதில் இந்தோ திபெத் எல்லைக் காவல்படை(ITBP) வீரர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.பஹல்காமில் சந்தன்வாரி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது, பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் ஆற்றுப்படுகையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பேருந்தில் சென்ற 39 பேரில் 37 பேர் ITBP வீரர்கள், 2 பேர் காஷ்மீர் காவல்துறையினர்.பலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Tags :