தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை

by Editor / 13-09-2022 10:03:05pm
தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை

தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.தமிழ், ஆங்கிலத்தில் பணியாற்ற 9 செய்தியாளர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று முதல் வரும் அக்டோபர் 12-ம் தேதி வரை http://www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 17 முதல் 19-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்படும் என்றும்,டிசம்பர் 21-ம் தேதி கணினி வழித் தேர்வு நடைபெறும் என்றும், விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் சுருக்கெழுத்து & தட்டச்சுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வாகும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் விரிவான தகவல்களுக்கு https://apply.tnpscexams.in/ என்ற இணைதளத்தைப் பார்க்கவும்.

 

Tags :

Share via