ஏழை எளிய-ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக வக்கீல்கள் வாதாட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Staff / 20-09-2022 03:30:55pm
ஏழை எளிய-ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக வக்கீல்கள் வாதாட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை பெருங்குடியில் இன்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதன்மை விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மென்மேலும் பொலிவுற்று பல சட்ட மாமேதைகளை உருவாக்கி சமூகத்திற்கு நன்மக்களை வழங்கக்கூடிய நற்பணியில் பல நூற்றாண்டுகள் சிறந்து செயல்பட வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். உங்களது சட்ட அறிவை, வாதத்திறனை, ஏழை எளிய-ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

 

Tags :

Share via