பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 18-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

by Editor / 20-09-2022 08:31:38pm
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 18-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலானது தனது சேவையை தொடங்கி 17 ஆண்டுகள் நிறைவடைந்து 18-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. அதனைத் தொடர்ந்து இன்று செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் உள்ளூர் கட்சி பிரமுகர்கள் சார்பில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாலை அணிவித்து தோரணங்கள் கட்டப்பட்டன. தொடர்ந்து, ரயில் பயணிகள் சார்பில் கேக் வெட்டி பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 18-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

 

Tags :

Share via