ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர்.பிளாக்மெயில் செய்த சிறுவன் கொலை!

by Staff / 23-09-2022 11:54:36am
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர்.பிளாக்மெயில் செய்த சிறுவன் கொலை!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் செப்.22ம் தேதியன்று வாய் மற்றும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு ஹசிரா பகுதியில் 20 வயது இளைஞர் ஒருவர் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கு கண்டெடுக்கப்பட்ட தற்கொலை கடிதத்ததில், "சிறுவன் தன்னுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகவும், தன்னை பிளாக்மெயில் செய்தான்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பழைய ஜேசி மில் வளாகத்தில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அங்கு ஒரு மேக்கப் உபகரணமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மேக்கப் கலைஞரான அந்த இளைஞர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு சிறுவனைக் கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
டேக்ஸ் :டிரெண்டிங்குற்றம்

 

Tags :

Share via