ஒரே இரவில் ஐந்து வீடுகளில் கொள்ளை

by Staff / 03-10-2022 04:15:32pm
 ஒரே இரவில் ஐந்து வீடுகளில் கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது நெடுக்கம்ப்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் நேற்று ஒரே இரவில் இடங்களில் ஐந்து இடங்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். நெடுக்கம்பட்டு கிராமத்தில் மேலகொல்லி தெருவை சேர்ந்த அமலா என்பவரது வீட்டில் 11/2 சவரன் தங்க நகைகள், 2 செட் வெள்ளி கொலுசு, 5ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவையும், வின்சில் மொசன் என்பவரது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த XL வாகனத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். பழைய மாதா கோவில் தெருவை சேர்ந்த பெரிய மேரி என்பவரது வீட்டில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த 4 சவரன் தங்க நகை, 10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மலேசியாவில் வசிக்கும்; கல்லறை மேட்டுத் தெருவில் உள்ள வேளாங்கண்ணி என்பவரது வீடு, அதே போல் பம்பாயில் வசிக்கும் ஜெபஸ்டின் என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வீடுகளிலும் வீட்டில் யாரும் இல்லாததால் நகை மற்றும் பொருட்கள் இல்லாததால் திருட்டு தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடன் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதும் காவல்துறையின் சார்பில் இதுவரை ஒருவரை கூட பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via