ஆசிரமத்தை காணோம்... போலி நித்யானந்தா போலீசில் புகார்.
திருப்பூர் பல்லடம் காவல் நிலையத்துக்கு நித்யானந்தா தோற்றத்தில் சொகுசு காரில் சாமியார் ஒருவர் வந்தார். அவர் பெயர் பாஸ்கரானந்தா. இவர் காரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அங்கு கட்டப்பட்டு வந்த ஆசிரமத்தில் இருந்த தனது அறையில், 25 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதாக பல்லடம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த வாரம் பாஸ்கரானந்தா புகாரளித்தார்.இதனிடையே, வெளியூர் சென்றிருந்த பாஸ்கரானந்தாவுக்கு ஆசிரமக் கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருப்பதாக, தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் பல்லடம் போலீசாரிடம் ஆசிரமத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
Tags :