ரேசன் அரிசி கடத்தல் கும்பல் தலைவன் குண்டர் சட்டத்தில் கைது
திருவள்ளூர் மாவட்ட திருநின்றவூரை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் ரேசன் அரிசி கடத்தல் தொடர்புடைய வழக்குகளில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய காவல் துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, சக்கரவர்த்தி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது.
Tags : ரேசன் அரிசி கடத்தல்