வீலர்ஸ் தீவு அருகே தீப்பிடித்த படகு

by Staff / 07-10-2022 11:17:16am
வீலர்ஸ் தீவு அருகே  தீப்பிடித்த படகு

ஒடிசா பத்ரக் மாவட்டம் தோசிங்கா கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென படகில் தீப்பிடித்தது. வீலர்ஸ் தீவு அருகே சென்றபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதைத் தொடர்ந்து, கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீப்பிடித்த படகில் இருந்த மீனவர்களை அருகில் இருந்த மற்றொரு மீன்பிடி படகு மீட்டது. இதையடுத்து கடலோர காவல் படையினர் மற்றும் கடற்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 10 மீனவர்களை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
 

 

Tags :

Share via